நீ -நான்
வெறும் அடையாளம் தான்
அடைகாத்தல் தான் அடையாளம்
கடவுள் - மனிதம் -மிருகம்
எதன் அடைகாத்தல் நாம்?
புரியாத புதிர் இல்லை
புரிந்துகொள்ள பயம்
புரிந்தாலும் பயன்படுத்த பயம்
அடைதல் -அடைகாத்தல்
இந்த இரண்டை விட
அடையளம் தான் நிஜம்
எனக்கு பின் விட்டு செல்ல
இல்லை இந்த அடையளம்
என்னை எனக்குள்
விதைப்பது
- புகழ்
No comments:
Post a Comment